சனி, 6 ஜூன், 2009

"நல்வரவு!'


அருணனின் பார்வையில்
அகிலத்தின் உயிர்ப்பு!
அருணனின் போர்வையில்
அகில்மனங்கள் இலயிப்பு!

தருணம் இதுவென்று
தழுவிவரும் தென்றல்
தருணம் பார்த்திருந்த
உழவனவன் நெஞ்சில்

வருணன் பொழிந்ததுபோல்
வருங்காலம் சிறக்குமென்று
அருணன் ஒளிக்கதிரில்
அகம்மகிழ் திருநாள் இன்று!

அருணன் அவன்தனுக்கு
அழகுறவே பொங்கலிட்டு
அருணன் அவன்மகிழ
அழகுமலர் தைமலர்ந்தாள் இன்று!

அருணன் அவன்வரவு
அகிலத்தில் நல்வரவுபெற
அருணன் அவன்தனைப்போற்றி
அகில் மணமாய் நாம் நலம்பெறுவோம்!

அருகிடட்டும் துன்பங்கள்!
பருகிடட்டும் இன்பங்கள்
பெருகிடட்டும் நல்மனங்கள்!
உருகிடட்டும் கல்மனங்கள்!

மருவிடட்டும் தென்றலதாய்!
வருடிடட்டும் திங்களதாய்!அகிலம்
உயிர்பெறட்டும்! அன்பில்
உயிர்கள் ஒளிபெறட்டும்!

அனைவர்க்கும் இதயம் கனிந்த
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக