சனி, 6 ஜூன், 2009

"மாங்கனி!"

மாங்கனியே!
உனக்காக ஓர் கவிதை!
மாங்கனியே! நீ
எனக்காகத் தேன்தமிழில்
தாங்கிவரும்
உனக்காக ஓர் கவிதை!உயிர்
தாங்கிவரும் தேன் நீ!
உனக்காக ஓர்கவிதை!

"மாங்கனி நீ!' என்றதும்
"முக்கனியில் நீ
மாங்கனி"யாய் என்பதொன்று!
முத்தமிழில் நீ
தாங்கிவரும் தேன்தமிழ்க்
காவியமாய் கவி
தாங்கிவரும் வான்சுடர்க்
கவியரசன் "மாங்கனி" என்பதொன்று!

மாங்கனி! தேமாங்கனி!
புவிமாங்கனி தந்த தேன்
மாங்கனி நீ! தேன்
சுவையாகி தேனிதழூறும் தேன்
தாங்கிவரும் மாங்கனி நீ!
மாங்கனிகளுள் முன்
தாங்கிவரும் "முதற்கனி" நீ!
முக்கனிகளில் "முதல்வன்"நீ!

மாங்கனி உனைநினைத்தால்
வாயூறும்! வாய்நறு
மாங்கனி! உன் மணம் நுகர்மனம்
மகிழ்வூறும்!உனைத்
தாங்கிவரும் ஊர் அழகு!
உலகழகு! உன் பேர்
தாங்கிவரும் தமிழ் அழகு! உன்
தளிர் பேரழகு!

மாங்கனி நீ! சேராத பஞ்சகமா!
முதல் மஞ்சத்துள்
மாங்கனி நீ சாராத மஞ்சமா!
நெஞ்சத்துள் கவிபஞ்சமா!
தாங்கிவரும் பாடல்களில்
தழுவிவரும் உனைத்
தாங்கிவரும் தேடல்களில்
ஏங்கிவிடும் மனங்கள்தான் கொஞ்சமா!

"மாங்கனி" நீ! காவியநாயகன்
கண்ணதாஸன் அவன்
"மாங்கனி" நீ! காவியமாய்
சிறைக்கூடமதில் கவி
தாங்கிஅரும் மாங்கனியாய்
ஆறுமணிகளுக்குள்
தாங்கிஅரும் தங்கமானாய்
"தங்கம்" ஆனாய்!

"மாங்கனி" நீ! அவன்
கவிநயத்துள் தேன்
மாங்கனி நீ! தமிழ்த்
தேன்சுமந்த நயம்!மது
தாங்கிஅருந் தமிழுக்குள்
தழுவிவந்து உயிர்
தாங்கிஅருந் தேன்தமிழாய்
தென்றலாய் வருடியதே!

மாங்கனி! உனைப்பாட
மாங்கனித்தமிழுக்குள் ஒருமா
மாங்கம் போதாது! மறுபிறவி
பிறப்பெடுத்து நான் உன்
பாங்கினைப் பாட வேண்டும்!
உனைத்தழுவி தெம்
மாங்கினில் பாடவேண்டும்!
எனைத்தழுவும் நீ வாழ்க!

உன் புகழ் வாழ்க! உலகுள்ளளவும்
உன் பேர் வாழ்க! அள்ள அள்ளக்குறையாத
உன் சுவை வாழ்க! தமிழ் உள்ளவரை
உன் பேர் வாழ்க! மாங்கனியே! நீ வாழ்க!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக