சனி, 6 ஜூன், 2009

"நீதி"

எரிந்த வீட்டில் பிடுங்கியது மிச்சமாய்
எரிந்த வயிறுகள் சாபமாய் சுனாமியால்
சரிந்த மக்களின் துயர்துடைப்பு நிதிவரவில்
வரிந்த மாக்களின் கயமைத்தனம் தெரிந்ததே!

பிரிந்த உறவுகள் அவலங்கள் ஒருபுறம்!
சரிந்த மனங்களின் ஏக்கங்கள் ஓருபுறம்!
சரிந்த மனங்களின் சாவினை எதிர்பார்த்து
"விரிந்து மறுமுறை சுனாமி வராதா!" என்கின்ற

உறிஞ்சும் வர்க்க ஓநாய்கள் ஒருபுறம்!
புழிஞ்சு இரத்தத்தை உறிஞ்சும் எண்ணங்கள்
அறிஞ்சும் அறியாமல் கண்மூடித்தனங்களாகி
தெரிஞ்சும் தெரியாமல் மண்மூடும் மனங்களேனோ!

எரிஞ்ச வயிறுகள் சாபம் இவர்களை
உறிஞ்சிக்கொல்லும்! உயிர்கொல்லிபோலே
எரிஞ்சுகொல்லும்! ஏழைகள் மனம்நொந்து
எரிஞ்சு வீழும்கண்ணீர் கூரியவாளைப்போல்

அரிஞ்சு வீழ்த்தும்! ஆழ்கடல் சத்தத்தில்
தெரிஞ்சு செய்யும் மூழ்கடல் மனங்கள்
எரிஞ்சு சாம்பலாகும்! வாழ்கடல் வாழ்க்கை நியதி
அறிஞ்சு சொல்லும் சேதி தெரிஞ்சு சொல்லும் நீதி இது!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக