ஞாயிறு, 7 ஜூன், 2009

என் நினைவுகளில் நீ (148)


இதயத்தில் உதயமதைத்
தழுவிவரும் இளந்தென்றலே!
உதயத்தைத் தரிசிக்கும்
உயிர்களின் உரிமைத் தழுவலிது!
இதயத்தை இணைத்துவைத்து
இருவரின் துடிப்புதனை
உதயத்தில் வரவுவைத்த
உயிர்களின் இன்பத்தேடலிது!

கதைகளில் கவிதைகளில்
காவியத்தில் ஓவியத்தில்;
விதைகளின் விடியல்தனில்
ஓவியத்தின் காவியமாய்
சிதைகளில் சிதைந்திடாத
சிற்பங்களில் சொற்பதமாய்
சதைகளில் சந்திக்கா
சரித்திர விற்பன்னன் செதுக்கியது!

புதையலில் புதையல் இது!
புதுமைக்குள் புதுமையிது!
கதைகளில் தழுவல்தனை
காதலின் நினைவுகளை,
விதைகளில் தாங்கிவரும்
சாதனைத் தழுவல் இது!
விதைகளில் விடியல் வேதனை
விடியலின் விடியல் இது!

புதைகுழிகளில் புகுந்திடா
புகழ் உச்சியின் உயரம் இது!
வதைகுழிகளில் வதங்கிடா
வளம் பெற்ற வடிவம் இது!
கதைகளும் பல
காதல்கதைகளும் மலர்ந்த இடம்!
உதைகளும் உணர்வுகளின்
நினைவுதைகளும் இணைந்த இடம்!

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக