ஞாயிறு, 7 ஜூன், 2009

"சமநீதி"

நீதியின் சின்னம் படும்பாடு!நியாய
வாதிகள் தம்மில் படும்பாடு!
பாதியில் இன்னும் பெரும்பாடு!பக்க
வாதிகள் தம்முள் சுடும்காடு!

சாதிகள் தம்முள் சாதிக்கும் உயர்
நீதிகள் எம்முள் போதிக்கும்
நீதியின் இன்னும் இழுபாடு! அதன்
நாதியின் தன்மை குழுமாடு!

நீதிகள் செத்து மடிகிறது!கொடும்
பாவிகள் பித்து எழுகிறது!
நாதிகள் அற்ற தன்மையினால் சிலர்
மேவிடும் சித்துப் பலிக்கிறது!

ஓதிடும் மனங்களில் உண்மைகள் ஓங்கி
ஒலித்திடவேண்டும்! நன்மைகள்
வாதிடும் மனங்களில் உண்மைகள் என்றும்
பலித்திடவேண்டும் திண்மைகள்!

நீதிகள் வேதம் மெய்த்திடவே சாம
பேதங்கள் தண்டம் ஓங்கிடவே
பாவிகள் பாவங்கள் தொலைந்திடவே நீதி
பேதங்கள் தண்டம் பெற்றிடவேண்டும்!

நீதிகள் தம்மை மறப்பவரை புத்தி
ஜீவிகளாக நினைப்பவரை
நாதியில்லா நிலையாக்கிடவே நியாய
சாவிகள் சகிதம் சாத்த வேண்டும்!

நீதிகளாகும் நிலைவேண்டும்! சம
நீதிகள் உலகம் பெறவேண்டும்!
பாவிகள் ஆணவம் மடிந்திடவே நீதி
காவிடும் என்ற நிலைவேண்டும்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3713&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக