ஞாயிறு, 7 ஜூன், 2009

"எனக்குள் நீ!"

அருணன் உந்தன் பெயரதுவாய்
எந்தன் பெயர்தான் இணைந்தபோது
'தருணம் இதுதான்' என்று நான்தான்
உன்தன் பெயருள் ஒளிர்ந்து நின்றேன்!
அருணன் நீ தான் வயப்பட்டாய்;! வாழ்வில்
வரவு அதுவாய் இணைத்திட்டாய்!
'தருணம் இதுதான்' என்றிட்டாய்!
காருண் யன் அதுவாய் இணைந்திட்டான்!

இருளும் அதுவாய் அகன்றது!
அருளும் வந்து இணைந்தது!
பொருளும் இதுவாய் புரிந்தது!
புகழும் வந்து நிறைந்தது!
மருளும் மனம்தான் அகன்றது!
புலரும் பொழுதாய் மலர்ந்தது!
சுருளும் தனம்தான் வரிந்தது!
சுகமும் முழுதாய் இணைந்தது!

வருடும் தென்றல் இணைந்தது!
வாழ்க்கை வசந்தம் ஆனது!
திருடும் மனங்கள் அகன்றது!
திகழும் திங்கள் தவழ்ந்தது!
குருடும் முன்றல் மறைந்தது!
சீழ்க்கை சிரங்கும் அழிந்தது!
வருடும் தினங்கள் வளர்ந்தது!
மகிழும் மலரும் மலர்ந்தது!

பருகும் தேனாய் நீ வந்தாய்!
பழகும் தமிழே! நீ நிறைந்தாய்!
உருகும் பாகாய் உன்னன்பில்
அழகும் சுகமும் நீ தந்தாய்!
அருகும் வானாய் நீ ஒளிர்ந்தாய்!
அழகே! உயிரே! என்வசமானாய்!
பருகும் பாலாய் என்னன்பாய்!
அருணனே! ஆதித்தா!நீயும் வந்தாயே!

நன்றி
சுகம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3138&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக