ஞாயிறு, 7 ஜூன், 2009

"முகத்திரை விலகட்டும்!"


அகத்திற்குள் ஆயிரம்! எகத்தாளம் பேசும்
அகத்திற்குள் ஆயிரம்! சுகத்தாளம் வீசும்
அகத்திற்குள் ஆயிரம்! புறத்தாளம் கூசும் இதய
அகத்திற்குள் ஆயிரம்! முகத்தாழம் பேசும்!

"அகத்தின் அழகது முகத்தினில் தெரியும்!"
ஆன்றோர் வாக்கது அதில் உள்ள உண்மை
அகத்தில் நல் மனம் அறிந்திடும் உண்மை!
சான்றோர் அழகதாய் முகத்தினில் வெண்மை!

நிறத்தினில் அல்ல! குளிர் முகத்தினில்
நிலவதன் வெண்மை! தளிர் மனங்களின்
புறத்தினின் தண்மை! வெளிர் மனங்களின்
புலர்பொழுததன் தன்மை! எழிலதன் மென்மை!

முகத்திரை விலக்கி அகத்திரை பார்த்தால்
இகத்தினில் இல்லை ஏமாற்றம்! உன்
மனத்தினில் இல்லைத் தடுமாற்றம்! உன்
மனத்திரை விலக்கு! உன் மனத்தினைத்துலக்கு!

இகத்தினில் இல்லை இனித்துயரம்! மன
முகத்தினை நீயும் ஒருநிலையாக்கு!
புறத்தினில் இல்லை உன் எதிரி! உன்
அறத்தினில் நீயும் மேல் நிலைச்சுருதி!

சுகத்தினை நீயும் சுயநலத்தினில் நினைத்தால்
இகத்தினில் உனக்கு உயர்வில்லை! மனச்
சுகத்தினில் நீயும் பொதுநலத்தினை நினைத்தால்
ஜெகத்தினில் உனக்கு அழிவில்லை!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக