ஞாயிறு, 7 ஜூன், 2009

"கவலைவிடு கிளியே!"


தனிமையைப் போக்க எண்ணி தன்
தனிமையைப் போக்க எண்ணி
இனிமையாய் இணைந்திருந்த உனை
இனிமைத்துணையுடன் இணைந்திருந்த உனை

தனிமைச்சிறைக்குள் தவிக்கவைத்த தரங்கெட்டவர்க்கு
இனிமைச்சுகமறியா புவிமாந்தர் அவர்தமக்கு உன்
கனிமைமனமறியாக் காதகர் அவர்தமக்கு உன்
தனிமைக்கொடுமை எங்கே தெரியப்போகிறது!

'இனிமைக்காலங்கள் நான் இணைந்திருந்த
இனிமைக்காலங்கள் இனியெங்கே வரப்போகிறது! என்
தனிமைத்தவிப்பெங்கே தீர்படப்போகிறது!" என்றவுன்
இனிமை ஏக்கங்கள் தீரும் காலம்வரும்!

தனிமைக்கொடுமைகள் தீரும் காலம்வரும்!
இனிமைக்கனவுகள் அரங்கேறும் காலம்வரும்!
தனிமைச்சிறையுடைத்து உன்னடிமைவிலங்கொடித்து
இனிமைக்கிளியே!உன்னிணைந்தஜோடி உனைமீட்டுவிடும்!

இனிமையுள்ள கிளியே! "தனிமையுனக்கினியில்லை!
இனிமையில்லா அரக்கர் மத்தியில் நீயில்லை!
இனிமைத்துணை நான் உன்னுடன் இருக்கையிலே
இனிமைத்துணைக்கோலம் நமைமறக்கும் சுகராகம்தரும்!"

"இனியென்ன கவலை உனக்கு"என்று உன்ஜோடி
இனிமைநிறைக்கின்ற கிள்ளைமொழிபேசி
தனிமை விரட்டிச்சுகராகம் மீட்டி உன்னுள்
இனிமைச்சுகம் நிறைக்கும் காலம்வருகிறது கலங்காதே!

நன்றி
சுபம்

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக