ஞாயிறு, 7 ஜூன், 2009

"நம்பெருமை"

"பாசம்" பார்முழுதும் படர்ந்திருக்க
"பாசம்" தன்னின் படர் நிலைதெரியாது
"பாசம் நமக்குமட்டும் சொந்தம்! தேசப்
"பாசம்" என்றுமே நம் சொந்தம்!" என்று .

தேசம் விட்டு பிற தேசம் வரும்வரை
"பாசம்" பற்றிய கருத்தை நானும் கொண்டதுண்டு!
தேசம் விட்டு பிற தேசம் வந்த பின்பு
"பாசம்" பற்றிய கருத்தில் மாற்றம் கண்டதுண்டு!

நேசம்கொண்ட மனங்கள் தம்மை நிற
பேதம்தாண்டிப் பார்த்திருந்தேன் இன்று!
வாசம்மிக்க பாசம் கொண்ட மனித
நேசம்கொண்ட மனங்கள் பார்த்தேன் இன்று!

"நேசம்" கொண்ட "மனித நேயம்" தன்னை பல
தேசம் தன்னில் பார்த்தேன் இன்று! நம்மில்
நாசம்கொண்ட நம்மவர்கள் சிலர் நம்
தேசம்தாண்டி வந்து செய் சேட்டைகளால்...

தேசம்விட்டுத் தேசம் தாண்டிவந்து
நாசம் செய்யும் சில கூட்டங்களால்...
நேசம்பற்றிச் சந்தேகம் மேலைத்
தேசங்களைப் பாதித்திருந்ததனால்...

நேசம்கொண்ட மேலை இனங்கள்கூட
நாசக்காரர்போல நமைப் பார்த்ததுண்டு!
பாசம்கொண்ட மேலை மனங்கள் சில
நேசக்கணைகளாலே நமைத் துளைத்ததுண்டு!

"தேசம்விட்டு தேசம் வந்து உங்கள்
நாசக் கேட்டை நாம் பார்த்தபின்பு
பாசம்வைக்கப் பயமாயிருக்கு!" என்று மேலைத்
தேசர் நம்மைக் கேட்பதுண்டு! அவர்தம்

பாசம் கொண்ட மக்கள் தம்மை
நாசம் செய்யும் நம் சிலர் செய்கையாலே
பாசம்வைக்கப் பயம்தான் கொண்ட மேலை
நேசம்கொண்ட மனங்கள் கூற்று அது!

வேசம்எல்லாம் கலைந்த பின்பு மனித
நேசம் எல்லாம் தொலைத்தபின்பு பிற
தேசம்மீது குறைகள்சொல்ல மேலைத்
தேசப்பாசம்மீது கறைகள் சொல்ல....

பாசம்கொண்ட மனங்கள்போல நடிக்கும்
வேசம்கொண்ட சிலர் தமக்குள் தம்தம்
தேசம்மீது பற்று என்று பிதற்றும்
கோசம்செய்யும் நிலைதான் ஏதோ!!

பாசம் இருக்கும் மனங்கள்கூட
பாசம்தனுக்காய்ப் தினமும் பார்த்திருக்க
நாசம் கொண்ட மனங்கள்தம்மில் நாம்
பாசம் கொண்டு அலைநிலைதான் ஏனோ!

பாசம் சக்தி இழந்திடாதா! அவர்
வேசம் புத்தி அறிந்திடாதா!
நாசம் செய்யும் மனக்களைகள் நீக்கி
நேசம் பாசம்தனை நாம் வளர்ப்பதற்கு....

தேசம்விட்டுத் தேசம் வந்த
தேசத்திலும் நாம் பாசம்வைத்து
பாசம் காட்டிப்பழகும் போதும் நம்
தேசப்பற்றும் கூடும்! கூடும்!

"பாசம்" நிறபேதம் தாண்டி நம் இதயம்
பாசப்பார்வை பார்க்கும் பார்வைக்குள்ளே
நேசம்காட்டி நாமும் பார்த்தால் போதும்!மேலைத்
தேசம்கூட நம் பாசப் பெருமைகூறும்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3849&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக