ஞாயிறு, 7 ஜூன், 2009

"நினைவுகள் போதுமடி!"


முத்திரை பதித்த அந்தத் தீபாவளி!
சித்திரை நிலவு நீ சந்தம் இசைத்து
முத்திரை பதித்த அந்தத் தீபாவளி!
நித்திரை மறந்து நிலவு நீ சுகித்திருந்து

முத்திரை பதித்த அந்தத் தீபாவளி!
இத்தரை மீதில் மீண்டும் கிடைக்கமுடியாத
சித்திரமாய் என்மடிமீது வீணையதாய்
நித்திரை விழித்திருந்து மீட்டிய சுகராகமதாய்

சித்திரைநிலவே! அத்தீபாவளி நினைவிருக்கா!
அத்தனை மனங்களும் பொறாமைகொள்ள
எத்தனை இன்பங்கள்! எத்தனை இன்பங்கள்!
பத்தரைமாற்றான சித்திரையே நினைவிருக்கா!

வித்தைகள் பயின்று வார்த்தைகள் மறந்து
எத்தனை சுகங்களடி! புற்றரை அமர்ந்து
"இத்தனை சுகங்களுண்டா!" என்று நீவிழிமலர்ந்து
வித்தைகள் பயின்ற வினாடியாய் மணிமறந்து

முத்திரை பதித்த அந்தத் தீபாவளி
இத்தரை மீதில் இனிவருமா! சொல்லடிகிளியே!
"பத்தரைக்குப் போகவேண்டும்" என்றாய்!
பத்தரை தாண்டி மறுபத்தரை வந்ததும் மறந்தோம்!

"எத்தனை மணி இப்போ சொல்லுங்கள்!
அத்தனைபேரும் பார்த்திருப்பார்கள் வீட்டில்!
மொத்தமாய்ச் சேர்ந்து வசைபடிக்கப்போகிறார்கள்!
எத்தனை மணி இப்போ சொல்லுங்கள்' என்றாய்!

"சித்திரையே! நீ போகவேண்டுமாடி கண்ணே!
எத்தனை மணியாகட்டும் போகட்டும் விடடி!" என்று
முத்திரை பதித்த முத்தங்கள் நினைவிருக்கா!
அத்தனையும் மறந்து இந்தத் தீபாவளியா!

எத்தனை தீபாவளி வந்து போகட்டும்!
அத்தனையும் தந்திட முடியாத அத்திருநாள்
இத்தரைமீதில் எமக்கு எதற்கடி நிலவே!நாம்
முத்திரை பதித்த அந்த நினைவே போதுமடி!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக