ஞாயிறு, 7 ஜூன், 2009

"பாரதிக்கு ஓர் மடல்!"

"பாரதியே மன்னித்துவிடு!"
என்று ஒர் மடல்
வான்தவழும் காற்றில்
தவழவிட்டேன் அன்று!
"பாரதி நான்களைத்துவிட்டேன்
ஐயா! மற்றோர்பிறவி
நான்வருகின்றேன்
சந்திப்போம்" என்றேன்!

பாரதி! உன்செவிதனுக்கு
வீழ்ந்ததனால்
ஏன்எனை நீ உயிர்
பிழைக்கவைத்தாயோ!
சாரதியாய் மனதொன்றை
இணைத்துவிட்டு
தேன்தமிழில் தவழ்தென்றலதாய்
வருடவைத்தாய்!

பாரதி! வருடங்கள் ஐந்தாகி
பலநூறு அநுபவங்கள்
நான் பெற்றேன்! சந்தம் இசைத்து
செந்தமிழில் சுகம்கண்டேன்!
பாரதியுன் எண்ணங்கள்
வண்ணங்களாகி என்சிந்தைக்குள்
தேன்தமிழாய் இனித்திருக்க
பனித்திருக்கும் இனிமை சுகம்கண்டேன்!

பாரதி! நீ பா ரதி!
பார்த்தசாரதி அவன் காதலி நீ!
வான்சுடர் நீ! தேன்தமிழ் நீ!
நான் விரும்பும் தேன்சுவை நீ!
பாரதில் பார்புகழ் பாரதிநீ!
தேரதில் பவனிவரும் தேன்கனி நீ!
வான்சுடர் உள்ளவரை நீயிருப்பாய்!
எங்கும் நீ நிறைந்திருப்பாய்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3830&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக