ஞாயிறு, 7 ஜூன், 2009

"தேன்மொழி"


நான் நானாக எனக்குள் என்னைத்தேடுகிறேன்!
'ஏன்! ஏன்!' என்ற கேள்வி வேள்வித்தீக்குள்
என்னை எனக்குள் தொலைக்கிறேன்!
தேன் தேனாக தேன்தமிழுக்குள்
என்னைத்தேடுகின்றேன்!
நான் நானாக இல்லை! தென்றலவள்
என்னைக்கூடுகின்றாள்!

மான்விழிப்பார்வைக்குள் மயக்கம்
தென்னை இளங்கீற்றுக்குள் கிறக்கம்!
தேன்மொழிப்போர்வைக்குள் முயக்கம்!
என்னை அரங்கேற்றத்தில் மயக்கம்!
தேன்மொழிமங்கைக்குள் தயக்கம்!
தென்னை இளநீருக்குள் கிறக்கம்!
வான்வழிநிலவுக்குள் மயக்கம்!
தன்னை வளம்குறைத்தாள் என்ற தாக்கம்!

"ஏன்" என்று தேன்மொழியைக்கேட்டேன்
"என்னை என்ன செய்யச்செய்யச்சொல்கிறீர்கள்"என்றாள்!
"நான்ஒன்று சொல்லட்டுமா" கண்ணே!
உன்னை வென்றுவிட முடியாத ஆற்றாமைதான்"எனறேன்!
"தான்"என்ற வான்வழிமங்கை
"தன்னை" தொலைத்துவிட்டால் வெல்லலாம்" என்றேன்!
தேன்மொழி கடைக்கண்ணால் பார்த்தாள்!
"உன்னை தொலைத்துவிட்டாயே என்னுள்"என்றது அவள் பார்வை!

'ஏன்' என்று புரியவில்லையடி"என்றேன்!
"உன்னை நீ இழந்து என்னை நீ பெற்றாயே"என்றாள்!
" நான் என்றுமே நானாகஇல்லையடி கண்ணே!"என்றேன்!
"என்னை நீ கலந்தபின் நீயென்பதேது"என்றாள்!
"தேன்மொழி! நீ என்னை விட்டுவிடாதையடி" என்றேன்!
உன்னை நான்கலந்தபின்பு பிரிவில்லைக் கண்ணா!"
என்றாள்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக