ஞாயிறு, 7 ஜூன், 2009

"புத்திதரும் பாடங்கள்!"


புத்திகெட்டுப் போதையிலே
சத்தியத்தை தொலைத்துவிட்டு
முக்திபெற்ற ஞானிகள்போல்
சத்தியத்தைப் பேசுவார்கள்!
சக்திகெட்டுப் பாதையிலே
சாகடிக்கும் மனங்களோடு
புத்தியுற்ற மானிடர்போல்
சத்தியெடுப்பார்கள்!

கத்திகொண்டு காமுகராய்
காட்டுமந்தைக் கூட்டமதாய்
புத்திகெட்ட பாதைகளைக்
காட்டுவார்கள்!- இதய
சுத்தியில்லா மனங்களவர்
கூட்டுகின்ற கூட்டங்களில்
புத்திகெட்ட மந்தைகள்போல்
காட்டுவார்கள்!

தத்திவரும் தங்கங்கள்
தரங்கெட்ட நிலைமாற
புத்திசொல்லும் வித்தைகளைக்
கற்றவர்கள்! இவர்கள்
புத்திதனில் பொங்கிவரும்
சிங்கங்கள் புரிந்துகொள்ள
புத்திவரும் பாடங்களைப்
புகட்டுங்கள்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக