ஞாயிறு, 7 ஜூன், 2009

"நேரம் நல்ல நேரம்!"


நினைவோடு நேசிக்கும்
யாசிக்கும் தென்றலே!
நினைவோடு நினைவு, கனவோடு கனவு,
கவிதை பாடும் உன்
நினைவோடு உயிராகும்,
உயிருக்குள் உயிராகும் தென்றலாய்,
மனையோடு மருவி,
அருவியாய் அருந்தமிழ்த் தேனாய்,

தினையாக, தினைமாவிளக்கோடு,
திருமால் தழுவிடும்
துணையாக, துணையோடு
துணையாக, இணைதழுவிடும்
மனையாக, மனதோடு மலராக,
மருவி மகிழ் மலர்ந்திட,
பிணையாக, கரும்பிணையாக,
வரும் துணையாகத் தழுவிட,

உனையாளும், விழித்துணையாக,
வழிகாட்டும் திசையாக,
எனையாளும் மொழித்துணையாகி,
மழைத் துளியாக,
உனைப்பாடும், உனைத்தழுவிடும்
தளிர் வசந்தமாய், நான்
எனைத்தேடும், உனக்குள் எனைத்தேடும்,
நேரம் நல்ல நேரம் இது!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக